போலி நாணயத்தாள்களுடன் நால்வர் கைது

போலி நாணயத்தாள்களுடன் நால்வர் கைது

by Staff Writer 31-01-2019 | 11:27 AM
Colombo (News 1st) திருகோணமலை - ஹொரவப்பொத்தானை மற்றும் மொரவெவ பகுதிகளில் போலி நாணயத்தாள்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொரவப்பொத்தானை நகரில் முச்சக்கரவண்டியொன்றை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் பயணித்த ஒருவரின் பயணப்பொதியிலிருந்து 29, போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் விஹாரகம மற்றும் மஹதிவுல்வெவ பகுதியை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மொரவெவ பகுதியிலும் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 16, ஐந்தாயிரம் ரூபா நாணயத்தாள்களும் 95,000 ரூபா நாணயத்தாள்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று (31) நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.