கொக்கட்டிச்சோலை பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

by Staff Writer 31-01-2019 | 7:36 PM
Colombo (News 1st)  இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 25,000 ரூபா இலஞ்சம் பெற்றமைக்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் நேற்று (30) மாலை இவர் கைது செய்யப்பட்டார். அனுமதிப் பத்திரமின்றி கைப்பற்றப்பட்ட மணல் லொறி ஒன்றை விடுவிப்பதற்கு குறித்த பகுதியிலுள்ள வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 30,000 ரூபா இலஞ்சம் கோரப்பட்டுள்ளது. அதில் 25,000 ரூபா பணத்தை பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து பெற்றுக்கொள்ளும் போதே கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டார்.