கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

25,000 ரூபா இலஞ்சம் பெற்றமைக்காக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

by Staff Writer 30-01-2019 | 10:00 PM
Colombo (News 1st)  25,000 ரூபா இலஞ்சம் பெற்றமைக்காக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று மாலை இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனுமதிப் பத்திரமின்றி கைப்பற்றப்பட்ட மணல் லொறி ஒன்றை விடுவிப்பதற்கு குறித்த பகுதியிலுள்ள வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 30,000 ரூபா இலஞ்சம் கோரப்பட்டுள்ளது. அதில் 25,000 ரூபா பணத்தை பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து பெற்றுக்கொள்ளும் போதே கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.