தெமட்டகொடை மோதல் சம்பவத்தில் இருவர் காயம்

தெமட்டகொடை மோதல் சம்பவத்தில் இருவர் காயம்

by Staff Writer 30-01-2019 | 7:01 AM
Colombo (News 1st) தெமட்டகொடை - காலிபுல்லே தோட்டத்தில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர். தெமட்டகொடை - காலிபுல்லே தோட்டப் பகுதியில் நேற்று இரவு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் மோதல் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 17 மற்றும் 18 வயதான இரண்டு வயதான இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்