ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை

by Staff Writer 29-01-2019 | 12:38 PM
Colombo (News 1st) 2010 ஆம் ஆண்டில் அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சொத்து விபரங்களை வௌியிடாத குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். வழக்கிற்கான சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்படாமையால் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்வதாக, கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று அறிவித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சொத்து விபரங்களை வௌியிடாமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் முதலாவது வழக்கான, 2010 ஆம் ஆண்டு சொத்து விபரங்களை வௌியிடாமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.