ஆடை ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பு

ஆடை ஏற்றுமதி வருமானத்தை 8 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பு

by Staff Writer 29-01-2019 | 5:42 PM
Colombo (News 1st) நாட்டின் ஆடை ஏற்றுமதி வருமானத்தை 8 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டளவில் இந்த இலக்கை அடைய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதுவரையான ஏற்றுமதியின் மூலம் ஆடை கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கு 6 வீத வருமானம் கிடைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.