காற்றின் மூலம் பரவிய படைப்புழு

காற்றின் மூலம் பரவிய படைப்புழு

by Staff Writer 29-01-2019 | 7:10 AM
Colombo (News 1st) நாட்டில் படைப்புழு காற்றின் மூலம் பரவியிருக்கக்கூடும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய நிபுணர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் பி ஹரிசன் குறிப்பிட்டுள்ளார். இந்த படைப்புழு சுமார் 100 கிலோமீற்றர் பறக்கக்கூடும் என்பதால், இந்தியாவிலிருந்து காற்றின் மூலம் படைப்புழு நாட்டில் பரவியிருக்கக்கூடும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பி ஹரிசன் மேலும் தெரிவித்துள்ளார்.