துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய 90 வீதமானோர் கைது

துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 90 வீதத்திற்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது

by Staff Writer 26-01-2019 | 3:35 PM
Colombo (News 1st) கடந்த வருடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 90 வீதத்திற்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். துப்பாக்கி பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கபடுவதாக பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார். சட்டவிரோதமாக துப்பாக்கிகள் வைத்திருப்போரை கைது செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார். இந்த நடவடிக்கைகளில் பொதுமக்களும் தமது ஒத்துழைப்பை வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். இதனை தவிர, இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பரிசில்களை வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.