கொழும்பில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

கொழும்பு - காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

by Staff Writer 26-01-2019 | 3:27 PM
Colombo (News 1st) 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகைகளால், கொழும்பு - காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இன்றும் (26), நாளையும் (27) எதிர்வரும் 31 ஆம் திகதியும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 3 ஆம் திகதி வரையும் ஒத்திகைகள் இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பிலான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை காலி முகத்திடலின் ஒரு பகுதி மூடப்படுவதுடன், கொள்ளுப்பிட்டி முச்சந்தி முதல் பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையான வீதியின் ஒரு பகுதியும் லோட்டஸ் வீதியின் செரமிக் சந்தியும் குறித்த காலப்பகுதியில் மூடப்படவுள்ளது. இந்த காலப்பகுதியில், காலி வீதியூடாக புறக்கோட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் லிபர்ட்டி சுற்றுவட்டம், பித்தளை சந்தி, சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, அக்பார் வீதி, மலே வீதி, சிற்றம்பலம் கார்டனர் வீதியூடாக கொழும்பு புறக்கோட்டையை சென்றடைய முடியும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். அத்துடன் கொழும்பு , புறக்கோட்டையிலிருந்து காலி வீதிக்கு செல்லும் வாகனங்கள் மேற்குறிப்பிட்ட சிற்றம்பலம் கார்டனர் வீதி,ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை ஊடாக காலி வீதியை சென்றடைய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்