கண்டியில் தனியார் பஸ் தீப்பிடித்தது

by Staff Writer 26-01-2019 | 8:21 PM
Colombo (News 1st) கண்டி - கொட்டப்பொல பகுதியில் தனியார் பஸ் ஒன்று தீப்பிடித்துள்ளது. கண்டியிலிருந்து - கம்பளை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஹெலிஓயாவிற்கும் பேராதனைக்கும் இடைப்பட்ட கொட்டப்பொல பகுதியிலே தீப்பிடித்துள்ளது. பஸ்ஸில் பயணித்த எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்