கேரளக் கஞ்சாவுடன் வல்வெட்டித் துறையில் மூவர் கைது 

ஒரு கோடியே 65 இலட்சம் ரூபா பெறுமதியான கேரளக் கஞ்சாவுடன் வல்வெட்டித்துறையில் மூவர் கைது 

by Staff Writer 26-01-2019 | 10:25 PM
Colombo (News 1st) வல்வெட்டித்துறையில் 110 கிலோகிராம் கேரளக் கஞ்சாவுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிற்கு கேரளக் கஞ்சாவை கடத்தத் தயாராகவிருந்த வேன் ஒன்றுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கைது செய்யப்பட்டவர்களில் 19 வயது இளைஞர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். வல்வெட்டித்துறை மற்றும் சுன்னாகம் பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சா ஒரு கோடியே 65 இலட்சம் ரூபாவிற்கும் அதிகப் பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.