by Staff Writer 25-01-2019 | 9:00 PM
Colombo (News 1st) லாஹூகல பிரதேச சபையில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது.
லாஹூகல பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வசம் காணப்படுகின்றது.
சபையின் தலைவர் எஸ்.ஏ.ஸ்டான்லி தலைமையில் சபை இன்று கூடியது.
லாஹூகல பிரதேசத்தில் கிராம வீதிகளுக்கான வீதி விளக்கு கட்டமைப்பு பொருத்தும் செயற்பாட்டில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் W.M.H.மஹிந்த இதன்போது தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் D.A.சூரசிங்க இதற்கு பதில் வழங்கிய நிலையில், சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
D.A.சூரசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரை அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்தமையால் இந்த நிலை ஏற்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, சபை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகின.