அற்புதம்மாள் 7 பேர் விடுதலைக்காக சுற்றுப்பயணம்

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் 7 பேர் விடுதலைக்காக சுற்றுப்பயணம்

by Bella Dalima 25-01-2019 | 4:26 PM
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சுற்றுப்பயணமொன்றை ஆரம்பித்துள்ளார். கோயம்புத்தூரில் பயணத்தை ஆரம்பித்துள்ள அற்புதம்மாள் ஈரோடு, சேலம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. அரசியல் இயக்கங்கள், மக்கள், மாணவர்கள் என பல தரப்பினரையும் சந்தித்து 7 பேர் விடுதலைக்காக கலந்துரையாடல் நடத்தவுள்ளார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம், தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி ஆளுநர் ஒப்புதலுக்கு முறையாக அனுப்பிய போதிலும், ஆளுநர் நான்கரை மாதங்களாக காலதாமதம் செய்து வருவதாக அற்புதம்மாள் குற்றஞ்சுமத்தியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்காக அனைவரும் துணை நிற்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.