ஹெரோயின் கடத்தலுடன் மேலுமொருவருக்கு தொடர்பு

தெஹிவளை ஹெரோயின் கடத்தலுடன் மேலுமொருவருக்கு தொடர்பு

by Staff Writer 25-01-2019 | 3:25 PM
Colombo (News 1st) தெஹிவளையில் இடம்பெற்ற ஹெரோயின் கடத்தலுடன் மேலுமொருவர் தொடர்புபட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. ஹெரோயின் கடத்தல் தொடர்பில் தேடப்படும் பிரதான சந்தேகநபரான பெண்ணைத் தவிர, இந்த கடத்தலுடன் மற்றுமொருவர் தொடர்புபட்டுள்ளார். பிரதான சந்கேதநபரான பெண்ணுக்கு, குறித்த நபரே ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மெற்கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள பங்களாதேஷ் சிறப்பு விசாரணைக்குழு, சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேநபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இதன்போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை (22) கொள்ளுப்பிட்டியில் ஹெரோயின் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆப்கான் பிரஜை, போதைப்பொருள் கடத்தலின் பிரதான சந்தேகநபர் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நாட்டில் 800 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதிக்குள், போதைப்பொருள் தொடர்பில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களில் 10 பேர் வௌிநாட்டு பிரஜைகள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.