மின்சாரக் கொள்வனவில் மீண்டும் மோசடி இடம்பெறும் சாத்தியம்

by Staff Writer 23-01-2019 | 9:43 PM
Colombo (News 1st ) தனியார் துறையினரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு நாட்டில் இரண்டே சந்தர்ப்பங்கள் தான் உள்ளன. அவ்வாறு கொள்வனவு செய்வதாக இருந்தால், நாட்டின் பிரதான மின்சார நிலையம் ஒன்று செயலிழக்க வேண்டும் அல்லது ஓர் மிகப்பெரிய இடர்நிலை ஏற்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான அவசர நிலைமையின் கீழ் தான் விலைமனு கோரலின்றி தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய முடியும். ஆனாலும், அதற்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இருப்பினும், அண்மையில் வௌியிடப்பட்டிருந்த பத்திரிகை விளம்பரமொன்றுக்கு அமைய, மின்சாரக் கொள்வனவிற்காக சர்வதேச ரீதியில் விலைமனு கோரப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிகத் தகவல்களை காணொளியில் காண்க...