by Staff Writer 23-01-2019 | 4:37 PM
Colombo (News 1st) கம்பளை - மகாவலி கங்கையில் குளிக்கச்சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மூவர் குளிக்கச்சென்ற நிலையில், இருவர் நீரில் மூழ்கியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதேசவாசிகள் இணைந்து அவர்கள் இருவரையும் மீட்டு கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை எக்கல பகுதியைச் சேர்ந்த 16 மற்றும் 20 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.