12 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர் 

புஞ்சி சிறிபாதயில் வௌிநாட்டவர் உள்ளிட்ட 12 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர் 

by Staff Writer 23-01-2019 | 5:56 PM
Colombo (News 1st) பண்டாரவளை - எல்ல, புஞ்சி சிறிபாத சுற்றுலா மலைப்பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 12 பேர் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் வௌிநாட்டவர்கள் 8 பேர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் பலர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இன்று மதியம் எல்ல பகுதியில் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்தவர்களே குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.