விஸ்வ பெர்னாண்டோ குழாத்தில் இணைப்பு

நுவன் பிரதீப்பிற்கு பதிலாக விஸ்வ பெர்னாண்டோ குழாத்தில் இணைப்பு

by Staff Writer 23-01-2019 | 9:17 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நாளை (24) ஆரம்பமாகவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமன்னே ஆகியோரை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை டெஸ்ட் அணித்தலைவரான டினேஸ் சந்திமால் தெரிவித்தார். இதேவேளை, உபாதைக்குள்ளாகியுள்ள வேகப்பந்து வீச்சாளரான நுவன் பிரதீப்பிற்கு பதிலாக விஸ்வ பெர்னாண்டோ குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேர்ன் மைதானத்தில் நாளை பகலிரவு ஆட்டமாக ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணியுடன் 13 டெஸ்ட் போட்டிகளில் இதுவரையில் பலப்பரீட்சை நடத்தியுள்ள அவுஸ்திரேலியா அதில் 11 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது. எனினும், 1989 ஆம் ஆண்டு கப்பாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை இலங்கை அணி வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டது. நாளைய போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவிக்க எதிர்பார்த்துள்ளதாக அவுஸ்திரேலிய அணித்தலைவரான டிம் பெய்ன் கூறியுள்ளார். இரு அணிகளுக்குமிடையிலான நாளைய போட்டி இலங்கை நேரப்படி காலை 8.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.