துப்பாக்கி அனுமதிப் பத்திரங்கள் பரிசீலனை

துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை

by Staff Writer 23-01-2019 | 8:32 AM
Colombo (News 1st) பிஸ்டல் மற்றும் ரிவால்வருக்காக விநியோகிக்கப்பட்டுள்ள துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளன. பிஸ்டல் மற்றும் ரிவால்வருக்காக விநியோகிக்கப்பட்டுள்ள துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களைத் தற்காலிகமாக இரத்து செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்தது. இதனையடுத்தே, அனுமதிப்பத்திரங்களை பரிசீலனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதிப்பத்திரங்கள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அதற்கான அனுமதியை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார். அதேநேரம், அனுமதிப்பத்திரம் அல்லாத துப்பாக்கிகளை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறும் இராணுவப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

ஏனைய செய்திகள்