ஜனாதிபதி இன்று சிங்கப்பூர் பயணம்

ஜனாதிபதி இன்று சிங்கப்பூர் பயணம்

by Staff Writer 23-01-2019 | 12:30 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (23) முற்பகல் சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் சூழலியல் நிறுவன பிரதிநிதிகள் மாநாட்டில் சிறப்புரை ஆற்றுவதற்காக ஜனாதிபதி சிங்கப்பூருக்கு பயணித்ததாக, ஜனாதிபதி ஊடகப்பரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி சிங்கப்பூரின் மரீனா பே செண்ட்ஸ் கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் ஆசிய பசுபிக் வலயத்தின் 40 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் சிங்கப்பூரில் தங்கியிருப்பதுடன், அந்நாட்டு பிரதமருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.