கோப் குழுவின் தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவு

by Staff Writer 22-01-2019 | 3:14 PM
Colombo (News 1st) கோப் (COPE) எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கோப் குழுவின் உறுப்பினர்களால் ஏகமனதாக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கோப் குழுவில் 16 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். ரவூப் ஹக்கீம், சுஜீவ சேனசிங்க, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அஜித் பீ. பெரேர, வசந்த அலுவிகார, ரஞ்சன் ராமநாயக்க, அசோக் அபேசிங்க, அநுர பிரியதர்சன யாப்பா, லக்ஸ்மன் செனவிரத்ன, சந்திரசிறி கஜதீர, மஹிந்தானந்த அளுத்கமகே, தயாசிறி ஜயசேகர, ரவீந்திர சமரவீர,சுனில் ஹந்துன்நெத்தி, மவை சேனாதிராசா மற்றும் ஜயந்த சமரவீர ஆகிய பாரளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.