நெடுங்கேணியில் இராணுவ ஜீப் விபத்து: இருவர் பலி

நெடுங்கேணியில் இராணுவ ஜீப் விபத்து: இருவர் உயிரிழப்பு

by Staff Writer 21-01-2019 | 3:47 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - நெடுங்கேணி பகுதியில் இராணுவ ஜீப் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில், இராணுவ அதிகாரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இராணுவ மேஜர் மற்றும் கோப்ரல் ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர். விபத்தில் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். இராணுவ ஜீப் வண்டியொன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.