by Fazlullah Mubarak 21-01-2019 | 8:42 AM
கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 6.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்து கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
கொழும்பு 13 ஐச் சேர்ந்த 32 வயதான ஒருவரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
காயமடைந்தவர் தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.