துப்பாக்கிப் பிரயோக விசாரணைக்கு 04 விசேட குழுக்கள்

துப்பாக்கிப் பிரயோக விசாரணைக்கு 04 விசேட குழுக்கள்

by Fazlullah Mubarak 21-01-2019 | 8:42 AM

கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 6.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்து கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பி சென்றுள்ளனர். கொழும்பு 13 ஐச் ​சேர்ந்த 32 வயதான ஒருவரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார். காயமடைந்தவர் தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

ஏனைய செய்திகள்