by Fazlullah Mubarak 21-01-2019 | 11:06 AM
துபாயிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதன்போது 10,000க்கும் அதிகமான சிகரெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்கிடமான ஒருவரை சோதனையிடும்போதே, குறித்த நபரின் பயணப்பொதிகளில் இருந்து சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாத்தாண்டிய பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.