கேரள கஞ்சாவே துப்பாக்கியை ஏந்த வைத்தது - பொலிஸார்

கேரள கஞ்சாவே துப்பாக்கியை ஏந்த வைத்தது - பொலிஸார்

by Staff Writer 21-01-2019 | 11:16 AM

கொழும்பு - ஜம்பட்டா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு கேரள கஞ்சா கடத்தல்காரர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே, காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 32 வயதான ஒருவர், தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கிருஷ்ணா மற்றும் ஆரோன் எனும் குழுக்களுடன் தொடர்புடைய நபரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு 4 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை 6.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்து கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.