by Fazlullah Mubarak 21-01-2019 | 8:59 AM
கொலம்பியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களிலீடுபட்டுள்ளனர்.
கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை கண்டித்தும்,அதன் போது கொல்லப்பட்ட 20 பொலிஸ் அதிகாரிகளை நினைவுகூர்ந்தும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொலம்பிய ஜனாதிபதி இவான் டக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து கொலம்பியாவில் இடதுசாரி தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என கொலம்பிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.