முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நாளை முதல் சீருடை

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நாளை முதல் சீருடை

by Staff Writer 20-01-2019 | 2:16 PM
Colombo (News 1st) முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நாளை (21) முதல் உத்தியோகபூர்வ சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, தேசிய வீதி பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார். சில முச்சக்கரவண்டி சாரதிகள், நாகரிகமான முறையில் உடைகளை அணிந்து பயணிப்பதில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வுகளில், தமக்கான சீருடையொன்றை வழங்குமாறு முச்சக்கரவண்டி சாரதிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தேசிய வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைக்கு சில முச்சக்கரவண்டி சாரதிகள் எதிர்ப்பு வௌியிட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்