கல்வியியல் கல்லூரிக்கு 8,000 மாணவர்கள் இணைப்பு

தேசிய கல்வியியல் கல்லூரிக்கு 8,000 மாணவர்கள் இணைப்பு

by Staff Writer 20-01-2019 | 1:13 PM
Colombo (News 1st) தேசிய கல்வியியல் கல்லூரிக்கு இந்தத் தடவை 8,000 மாணவர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை இம்மாத இறுதியில் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, கல்வியியற் கல்லூரியின் ஆணையாளர் கே.எம்.எச். பண்டார குறிப்பிட்டுள்ளார். கடந்த 3 வருடங்களாக, கல்வியியற் கல்லூரிக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை என வௌியான தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.