கிளிநொச்சியிலும் தற்போது படைப்புழுவின் தாக்கம்

கிளிநொச்சியிலும் தற்போது படைப்புழுவின் தாக்கம்

by Staff Writer 20-01-2019 | 1:33 PM
Colombo (News 1st) கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் தற்போது படைப்புழுவின் தாக்கம் வியாபித்துள்ளது. கிளிநொச்சி - செல்வாநகர் பகுதியில் சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயி ஒருவரின் தோட்டத்திலே படைப்புழு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சோளப் பயிர்ச்செய்கைகளில் வேகமாக பரவிவரும் படைப்புழுவின் தாக்கத்தினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்பாறை, மொனராகலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் பல ஏக்கர் ​சோளப்பயிர் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஹற்றன் பிரதேசத்தின் சில இடங்களிலுள்ள விளைநிலங்களிலிருந்து இந்த படைப்புழு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, படைப்புழுவை ஒழிப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அதன் உயிர் மாதிரி அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.