கல்கடுவ பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தல்

கல்கடுவ பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தல்

by Staff Writer 20-01-2019 | 7:52 AM
Colombo (News 1st) பாணந்துரை - இரத்தினபுரி பிரதான வீதியின் கல்கடுவ பகுதியில் பாதுகாப்பற்ற கற்பாறையொன்று வெடிவைத்து தகர்த்தப்படவுள்ளதால், இன்று மாலை 6 மணிவரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார்,  சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளனர். இதன்படி, இடங்கொட, எருபொல, எஹலியகொட ஊடாக கொழும்பு வீதியை அடைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தவிர, குருகம்மோதர, மாடுவாகல, எஹலியகொட மற்றும் கொரக்க எல, ஹல்பே, குருவிட்ட ஊடாகவும் கொழும்பு வீதிக்கு பயணிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.