வவுனியாவில் பஸ் ஊழியர்களிடையே மோதல்: இருவர் கைது

வவுனியாவில் பஸ் ஊழியர்களிடையே மோதல்: இருவர் கைது

by Staff Writer 19-01-2019 | 4:30 PM
Colombo (News 1st) வவுனியா - 8 ஆம் கட்டை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்களுக்கும் தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் நடத்துனர் மற்றும் சாரதிக்கும் வாரிக்குட்டியூர் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இடையில் நேற்று (18) மாலை மோதல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து கால அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது, காயமடைந்த சாரதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.