ஜா-எலயில் மோட்டார் சைக்கிள் ரயிலில் மோதி விபத்து: தாயும் மகளும் பலி 

by Staff Writer 19-01-2019 | 4:55 PM
Colombo (News 1st) ஜா - எல, துடெல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலில் மோதியதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த மூவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஜா - எல தடுவம பகுதியைச் சேர்ந்த 8 வயதான வஞ்சலா சமுதயா எனும் சிறுமியும் 36 வயதான குறித்த சிறுமியின் தாயாரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவரின் சகோதரர் ஒருவரே மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளார். சிலாபத்திலிருந்து - கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோட்டார் சைக்கிள் மோதியதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.