அம்பாறையில் 39 ஏக்கர் காணி விடுவிப்பு

அம்பாறையில் 39 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகள் விடுவிப்பு

by Staff Writer 19-01-2019 | 3:27 PM
Colombo (News 1st) அம்பாறை மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள 39 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யுத்த காலப்பகுதியில் இராணுவ முகாம்கள் அமைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையின் கிழக்கு தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் கண்காணிப்பில், அம்பாறை மாவட்ட செயலகத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இராணுவத்தின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அம்பாறை - கல்முனை பிரதேச செயலகப் பிரிவின் பெரிய நீலாவணை பகுதியில், அரை ஏக்கர் தனியார் காணியும் பள்ளக்காடு பகுதியில் 39 ஏக்கர் அரச காணியும் விடுவிக்கப்பட்டுள்ளன.