by Staff Writer 18-01-2019 | 10:25 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பண்டாரவளை - கினிகம பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலேயே அவர் இதனைக் கூறினார்.
இந்நிகழ்வு இன்று நடைபெற்றது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அடிக்கல் நாட்டும் நிகழ்வின் பின்னர் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
காணொளியில் காண்க...