தொடர்ந்தும் தேசிய வளங்களை விற்பனை செய்யும் பிரதமர்

by Staff Writer 18-01-2019 | 8:24 PM
Colombo (News 1st) இரத்தினபுரியில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட திறப்பு விழாவின் பின்னர் ரணில் விக்ரமசிங்க மத்தளை விமான நிலையம் தொடர்பில் இந்திய நிறுவனத்துடன் கலந்துரையாடி வருவதாகத் தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினாலும் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதால், அந்த நட்டத்தினை சரிசெய்ய சைனா ஹாபர் (China Harbour) நிறுவனத்துடன் பாரிய செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். நாட்டினை உரிய முறையில் நிர்வகிக்கும் தலைமைத்துவத்தினை வழங்க முடியாவிட்டால், செய்ய வேண்டியது தேசிய வளங்களை விற்பனை செய்வதை விட்டு விட்டு வீட்டிற்கு செல்ல வேண்டியதல்லவா?