கொலம்பியத் தலைநகரில் கார்க்குண்டுத் தாக்குதல்

கொலம்பியத் தலைநகரில் கார்க்குண்டுத் தாக்குதல்: 21 பேர் கொலை

by Bella Dalima 18-01-2019 | 5:27 PM
கொலம்பியாவின் தலைநகர் பொகோடாவில் (Bogotá) இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பொலிஸ் அகாடமி ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் 54 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. காரின் சாரதி 57 வயதான நபர் என அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவரும் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை. இந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி, இவான் டூக் (Ivan Duque) தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்