புத்தளத்தில் வெடிபொருட்களோடு நால்வர் கைது

புத்தளத்தில் வெடிபொருட்களோடு நால்வர் கைது

by Bella Dalima 17-01-2019 | 7:55 PM
Colombo (News 1st) வெடிபொருட்களோடு நான்கு சந்தேகநபர்கள் புத்தளம் - வண்ணாத்திவில்லு, லக்டோ தோட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 100 கிலோகிராம் வெடிபொருட்களும் 100 டெட்டர்நேட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.