கொக்கைன் கடத்தியவருக்கு மரண தண்டனை

கொக்கைன் கடத்தியவருக்கு மரண தண்டனை

by Staff Writer 17-01-2019 | 5:39 PM
Colombo (News 1st) கொக்கைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொஹூவளை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 28 வயதுடைய ஒருவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 62 கிராம் 620 மில்லிகிராம் நிறையுடைய கொக்கைன் போதைப்பொருளை கடத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சந்தேகநபர் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று அறிவித்து, தீர்ப்பு வழங்கினார். 2012 ஆம் ஆண்டு கொஹூவளை பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.