ADB உடனான கடன் திட்டங்களில் ஜனாதிபதி கைச்சாத்து

ஆசிய அபிவிருத்தி வங்கியுடனான கடன் திட்டங்களில் ஜனாதிபதி கைச்சாத்து

by Staff Writer 17-01-2019 | 1:32 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஆகியோர், 445 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 3 கடன் திட்டங்களில் கைச்சாத்திட்டுள்ளனர். பிலிப்பைன்ஸூக்கு 4 நாள் அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மணிலா நகரில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கு இன்று விஜயம் செய்திருந்தார். இதன்போது, இந்த விசேட உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அந்நாட்டு ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று அந்த நாட்டு ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது, இலங்கைக்கும் பிலிப்பைன்ஸூக்கும் இடையிலான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.