அக்கரைப்பற்று மாநகர சபை பிரதி மேயர் கைது

அக்கரைப்பற்று மாநகர சபை பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது

by Staff Writer 17-01-2019 | 3:33 PM
Colombo (News 1st) அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மருதானை பகுதியில் நேற்று (16) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வௌிநாட்டிற்கு பணியாளர்களை அனுப்புவதாகத் தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு தொடர்பில் பல முறை நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் மன்றில் ஆஜராகாமையை அடுத்து, பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, சந்தேகநபர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, சந்தேகநபர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.