English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
16 Jan, 2019 | 4:08 pm
Colombo (News 1st) பிரமுகர் கொலை சதி முயற்சி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா மற்றும் இந்திய பிரஜை மர்சிலி தோமஸ் ஆகியோர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை பதில் நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்ப்படுத்தியதை அடுத்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் முதலாவது சந்தேகநபரான மர்சிலி தோமஸுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அவருடைய மனைவி சஷி வீரவன்ச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஆகிய மூவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இந்த வாரம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவர்களை அழைத்துள்ளதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விசாரணைகள் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு அறிவிக்க வேண்டாம் என கடந்த 4 ஆம் திகதி நாமல் குமாரவிற்கு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அவரிடம் சமர்ப்பித்துள்ளதாக தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் முனசிங்க நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தமது திணைக்களத்தினூடாக சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் விசாரணைகளுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, குரல் பதிவின் மாதிரியை பெறுவதற்காக கடந்த 14 ஆம் திகதி அரச பகுப்பாய்வாளரிடம் நாமல் குமார அனுப்பி வைக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
26 May, 2022 | 06:51 PM
29 Apr, 2022 | 09:04 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS