இராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் இலங்கையர்கள் இருவர் கைது

இராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் இலங்கையர்கள் இருவர் கைது

இராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் இலங்கையர்கள் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2019 | 3:23 pm

Colombo (News 1st) இந்தியாவின் இராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் – தனுஸ்கோடிக்கு அருகில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் இராமேஸ்வரம் செய்தியாளர் கூறினார்.

இலங்கையர்கள் பயணித்த படகொன்றும் தமிழக கரையோர காவல் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தங்கியிருந்த இரண்டு இலங்கையர்களும் சட்டவிரோதமாக நாடு திரும்புகையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களும் மண்டபம் கரையோர காவற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்