கத்திக்குத்திற்கு இலக்கான போலந்து மேயர் உயிரிழப்பு

கத்திக் குத்திற்கு இலக்கான போலந்து மேயர் உயிரிழப்பு

by Bella Dalima 15-01-2019 | 5:54 PM
கத்திக் குத்திற்கு இலக்கான போலந்தின் Gdansk நகர மேயர் பவல் அடமோவிச் (Pawel Adamowicz) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அறக்கட்டளை ஒன்றின் கூட்டத்தில் பங்கேற்றிருந்த போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மேடையில் வைத்து அவர் கத்தியால் குத்தப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவர் கத்தியால் குத்தப்பட்டதும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு 5 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கத்திக் குத்துத் தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் வங்கித் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனை பெற்றவர் எனவும் தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு மேயரும் அவரது கட்சியுமே காரணம் என கூறி இத்தாக்குதலை மேற்கொண்டதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.