அரசியலமைப்பை விட தேர்தலே தேவை - பலரும் கருத்து

அரசியலமைப்பை விட தேர்தலே தேவை - பலரும் கருத்து

by Staff Writer 13-01-2019 | 7:26 PM

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தமது பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, இப்போதைய நிலையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமே அன்றி, அரசியலமைப்பு அவசியமில்லை என அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் குறிப்பிட்டார். இந்த நிலையில், கெடம்பே ராஜோபவனாராமய விகாராதிபதி கெப்பிடியாகொட சிரிவிமல தேரரும், புதிய அரசியலமைப்பிற்கு தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.