புத்தளத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

புத்தளத்தில் வாய், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

by Bella Dalima 12-01-2019 | 3:48 PM
Colombo (News 1st) புத்தளம் - ஆனமடுவ, புனம்பிட்டி பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாய், கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டவாறு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். 66 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் 3 பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது. கொலைச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.