சோளத்தில் புதிய வகை நோய்த்தொற்று

கிழக்கில் பயிரிடப்படும் சோளத்தில் புதிய வகை நோய்த்தொற்று

by Staff Writer 12-01-2019 | 5:36 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாணத்தில் பயிரிடப்படும் சோளத்தில் புதிய வகை நோய்த்தொற்று ஏற்படுவதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்கத்தின் காரணமாக சோளத்தின் அனைத்து பகுதிகளும் பாதிக்கப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். இதனை கட்டுப்படுத்துவதற்காக கிருமிநாசினிகள் விநியோகிக்கப்பட்டு வருவதுடன், மேலதிக நடவடிக்கைகளை விவசாயத் திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளனர்.