கண்டி தீ விபத்து: ராம்ராஜின் குடும்பத்தினருக்கு நியூஸ்பெஸ்ட் அமோக வரவேற்பு

by Staff Writer 12-01-2019 | 9:29 PM
Colombo (News 1st) கண்டி – யட்டிநுவர பகுதியில் கடந்த 8 ஆம் திகதி நாட்டை சோகத்தில் ஆழ்த்திய தீ விபத்து சம்பவம், தந்தையின் ஆழமான அன்பிற்கு சான்று பகர்கின்றது. இன, மத, மொழி, பால் வேறுபாடுகளைக் கடந்த மனிதநேயத்தின் மகத்துவத்தை இந்த சம்பவம் பறைசாற்றுகின்றது. தனது உயிரைப் பணயம் வைத்து, 3 பிள்ளைகளினதும் மனைவியினதும் உயிரைக் காத்த ராம்ராஜ் நாட்டு மக்கள் பலரதும் இதயத்தில் வீரத்தந்தையாக இடம்பிடித்தார். அவர் இன்று தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் இன்று நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு வருகை தந்திருந்தார். ராம்ராஜின் பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக இதன்போது நியூஸ்ஃபெஸ்ட்டால் அன்பளிப்பொன்றும் வழங்கப்பட்டது.