அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விதித்த நிபந்தனைகள் தொடர்பில் மாவை, சுமந்திரன் கருத்து

by Staff Writer 12-01-2019 | 8:12 PM
Colombo (News 1st) எவ்வித நிபந்தனையுமில்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். எனினும், தாம் நிபந்தனையுடனான ஆதரவையே வழங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசாவும் எம்.ஏ.சுமந்திரனும் தெரிவித்துள்ளனர். தாம் அரசாங்கத்திற்கு விதித்த நிபந்தனைகளாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டவை 01. பிரதேச மீளெழுச்சி 02. வடக்கு அபிவிருத்தி அமைச்சை பிரதமரிடம் ஒப்படைத்தல் 03. வடக்கு அபிவிருத்தி அமைச்சினை வடக்கு - கிழக்கு அபிவிருத்தி அமைச்சாக மாற்றல் 04. பிரதமருடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயலாற்றல் இதேவேளை, அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான நிபந்தனைகள் தொடர்பில் மாவை சேனாதிராசாவும் இன்று தௌிவுபடுத்தினார். அவர் குறிப்பிட்ட நிபந்தனைகளாவன 01. அமைச்சரவையில் தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் அதுகுறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஆராய்வதற்கான பொறிமுறை 02. இதனை நிறைவேற்றுவதற்காக குழு அமைத்தல்