பொதுச்செயலாளராக தயாசிறி ஜயசேகர கடமையேற்றார்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக தயாசிறி ஜயசேகர கடமையேற்றார்

by Staff Writer 10-01-2019 | 8:43 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்று கட்சி தலைமையகத்தில் கடமைகளை ஆரம்பித்தார். இன்று முற்பகல் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்கு சென்ற கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய செயலாளருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இந்த நியமனத்திற்கான கடிதம் இதன்போது ஜனாதிபதியினால் தயாசிறி ஜயசேகரவிற்கு வழங்கப்பட்டதுடன், நிகழ்வில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஏனைய செய்திகள்