வௌிநாடு செல்லும் பணிப்பெண்களின் வீதத்தில் வீழ்ச்சி

வௌிநாடுகளுக்கு செல்லும் பணிப்பெண்களின் வீதத்தில் வீழ்ச்சி

by Staff Writer 10-01-2019 | 8:00 AM
Colombo (News 1st) வௌிநாடுகளுக்கு பணிப்பெண்கள் செல்வதில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், வெளிநாட்டுப் பணிப்பெண்களின் வீதம் 31.7 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. எனினும், வௌிநாடுகளுக்குத் தொழிலுக்காக செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, பணியகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் 2,11,502 இலங்கையர்கள் வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளனர். அவர்களில் 1,44,531 பேர் ஆண்களாவர். இது மொத்த வௌிநாட்டுப் பணியாளர்களில் 68.3 வீதமாக இது பதிவாகியுள்ளது. இதேவேளை, 2018 ஆம் ஆண்டு 66,971 பெண்கள் மாத்திரமே வௌிநாடுகளுக்குத் தொழிலுக்காக சென்றுள்ளனர். கடந்த வருடங்களை விட தற்போது மத்திய கிழக்கு நாடுகளைத் தவிர்த்து ஐரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வோரில் அதிகரிப்பு காணப்படுவதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.